Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

ரயில் பாதை பராமரிப்பு பணி- ரயில் சேவைகளில் மாற்றம்

திருச்சிராப்பள்ளி ரயில்வே சந்திப்பு நிலையத்தில் ஒன்பதாவது நடைமேடை பத்தாவது இருப்புப் பாதை பணிகள் 23ஆம் தேதியிலிருந்து துவங்கி ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பணியினால் திருச்சிக்கு வந்து செல்லும் அனைத்து ரயில்களும் சிக்னல்கள் Manual ஆக இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிக முக்கியமாக மயிலாடுதுறையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் ஜனசதாப்தி ரயில் திருச்சியில் இருந்து கோயம்புத்தூரும், கோயம்புத்தூரில் இருந்து திருச்சி வரை இயக்கப்படும். இதே போல் மற்ற ரயில்களும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு தற்போது 23, 24 தேதிகளுக்கு வந்துள்ளது. அடுத்த அடுத்த தேதிகளில் ரயில் ரத்து மாற்றம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *