Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் விவசாயிகள் தொடர் போராட்டம்

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக மாநில அரசு தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் அணைக்கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும். கர்நாடகா அரசின் அணை கட்டும் முயற்சியை மத்திய அரசும், தமிழக அரசும் தடுத்து நிறுத்த வேண்டும்.

விவசாயிகள் வாங்கிய வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளின் விலை பொருளுக்கு இரட்டிப்பு லாபம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை முன்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினரின் தொடர் போராட்டம் தொடங்கியது.

இதில் இச்சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *