Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி மாநகர காவல் ஆணையர் மாற்றம் – சொல்லி அடித்ததாக தகவல் பரபரப்பு

திருச்சி மாநகரத்தில் காவல் ஆணையராக பணியாற்றி வந்த சத்ய பிரியா அவர்களுக்கும், ஒரு உதவி ஆணையருக்கும் இடையே மோதல் உருவானதாக கூறப்பட்டது. அதன் பிறகு அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மீண்டும் அவர் அதே இடத்திற்கு பொறுப்பேற்றார்.

இந்நிலையில் காவல் ஆணையருக்கும் அவருக்கு நடந்த வாக்குவாதத்தில் காரணமாக இந்த பணியிட மாற்றம் நிகழ்ந்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநகர காவல் ஆணையர் சத்ய பிரியா பணியிட மாற்றம் வேண்டும் என எந்த வேண்டுகோள் விடுக்காத நிலையில் இந்த 27 காவல்துறை அதிகாரிகள் மாற்ற பட்டியலில் அவரும் இடம் பெற்றுள்ளார்.

திருச்சி மாநகர காவல் துறையில் ஆணையர் மாற்றம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் திருச்சி சரக டிஐஜியாக இருந்த சரவணன சுந்தர் கோவை சரக டிஐஜியாகவும், திருச்சியில் புதிய டிஐஜியாக பகலவன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் காவல் ஆணையரும், சரக டிஐஜியும் ஐபிஎஸ் பணியிட மாற்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் திருச்சி மாநகர காவல் புதிய ஆணையராக காமினி பொறுப்பேற்க உள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *