Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் 10 சவரன் நகை எல்இடி டிவி கொள்ளை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநரின் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை எல்ஈடி டிவியை திருடிய செ ன்ற மர்ம நபர்களை வளநாடு போலீசார் தேடி வருகின்றனர்.மணப்பாறை அருகே ஊத்துக்குளி ஆதி காலப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (44 )இவர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு போக்குவரத்து கழகத்தில் 16 ஆண்டுகளாக ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் வேலைக்கு சென்ற சுரேஷ்குமார் மனைவி ரேணுகாவை தனது மாமனார் வீட்டில் விட்டுவிட்டு வீட்டை பூட்டிவிட்டு சென்று இருந்த நிலையில், இவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 3 பவுன் செயின், 1 பவுன் செயின், நெக்லஸ், 4 ஜோடி கம்மல் மோதிரம் என 10 பவுன் மதிப்புள்ள நகைகளையும் வீட்டில் மாட்டி இருந்த எல்இடி டிவியும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

கொள்ளை சம்பவம் குறித்து வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *