Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ரூபாய் 13,000 கோடி கடன் மோசடி மெஹுல் சோக்ஸியின் மனைவி மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல்!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் மோசடி செய்த வழக்கில், தப்பியோடிய நகைக்கடை வியாபாரி மெகுல் சோக்சியின் மனைவி ப்ரீத்தி கோத்தாரி, தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்டை ரத்து செய்யக் கோரி, சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார். விசாரணை அமைப்பான அமலாக்க இயக்குனரகம் (ED), கடந்த ஜூன் மாதம் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் கோத்தாரியை குற்றவாளியாக சேர்த்திருந்தது.

வழக்கில் பிரதான குற்றவாளியான தனது கணவருக்கு “குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானத்தை பதுக்கி வைப்பதில்” உதவியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் விஜய் அகர்வால் மற்றும் ராகுல் அகர்வால் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாததால், ஆகஸ்ட் 9ம் தேதி தனக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்ததாக கோத்தாரி கூறினார். பணமோசடி வழக்கு பதிவு செய்யப்படுவதற்கு முன்பே, 2018ம் ஆண்டு தான் ஆன்டிகுவா மற்றும் பர்புடாவிற்கு மாறியதில் இருந்து, அங்கு வசிப்பவராக இருந்ததால், தற்போதைய சட்ட நடவடிக்கைகள் பற்றி தனக்குத் தெரியாது என்றும் கோத்தாரி கூறினார். தற்போதைய விண்ணப்பதாரரின் (கோத்தாரி) வெளிநாட்டு குடியுரிமை மற்றும் இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் இடம் ஆகியவை இந்திய அதிகாரிகளுக்கு நன்கு தெரியும் என்று அம்மனுவில் மேலும் கூறப்பட்டுள்ளது.

வழக்கை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. சோக்ஸி மற்றும் கோத்தாரி தம்பதியைத் தவிர, அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையில் சோக்ஸியின் மூன்று நிறுவனங்களான — கீதாஞ்சலி ஜெம்ஸ் லிமிடெட், கிலி இந்தியா லிமிடெட் மற்றும் நக்ஷத்ரா பிராண்ட் லிமிடெட் — மற்றும் ஓய்வுபெற்ற பஞ்சாப் நேஷனல் வங்கியின் துணை மேலாளர் (பிராடி ஹவுஸ் கிளை, மும்பை) கோகுல்நாத் ஷெட்டி ஆகியோரையும் குற்றத்திற்கு உடந்தையாக குறிப்பிட்டுள்ளது.

2018 மற்றும் 2020ம் ஆண்டுகளில் அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட முதல் இரண்டு குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு சோக்ஸிக்கு எதிரான மூன்றாவது குற்றப்பத்திரிகை இதுவாகும். மும்பையில் உள்ள பிஎன்பியின் பிராடி ஹவுஸ் கிளையில் மோசடி செய்ததாக சோக்ஸி, அவரது மருமகன் நிரவ் மோடி மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் மற்றும் பலர் மீது 2018ம் ஆண்டு அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வழக்கு பதிவு செய்தது. சோக்ஸி, அவரது நிறுவனமான கீதாஞ்சலி ஜெம்ஸ் மற்றும் பலர் “பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு எதிராக சில வங்கி அதிகாரிகளுடன் சேர்ந்து மோசடி செய்த குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றாமல், வங்கிக்கு தவறான இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது, 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் இவர்கள் கொள்ளையடித்து கொண்டு சென்ற பணத்தை மீட்டெடுத்தால் தலா நபர் ஒருவருக்கு 15 லட்ச ரூபாய் கொடுக்கலாம் எனப்பேசியிருந்தார் பிரதமர் மோடி ஆண்டுகள் ஓடிக்கொண்டே இருக்கிறது பணம் தான் திரும்ப வந்தபாடில்லை.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *