திருச்சி மாநகரில் 7 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு அறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல் ஆய்வாளர் ரமேஷ் காந்தி மார்க்கெட் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், வீரசோலை கன்டோன்மெண்ட் குற்றப்பிரிவுக்கும்,
செல்வமலர் கன்டோன்மெண்ட் மகளிர் காவல் நிலையத்திற்கும், காவல் ஆய்வாளர் கவிதா கோட்டை மகளிர் காவல்நிலையத்திற்க்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதே போல் கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் இருந்த அருள்ஜோதி காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவுக்கும்,
கன்டோன்மெண்ட் மகளிர் காவல்நிலையத்தில் இருந்த ஆனந்தி வேதவள்ளி மது விலக்கு அமலாக்க பிரிவுக்கும், அங்கிருந்த வசுமதி அமர்வு நீதிமன்றம் காவல்நிலைய குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகர காவல் ஆணையர் காமினி பிறப்பித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments