Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கம் மற்றும் வினோத் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கம் மற்றும் வினோத் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமை திருச்சி மாம்பழம் சாலையில் நடைப்பெற்றது.

இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்று கண் பரிசோதனை செய்து கொண்டனர்.  வினோத் கண் மருத்துவமனை, மருத்துவர் டாக்டர் அரவிந்த் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார்.முகாமில் கண்புரை, தூரம் மற்றும் கிட்ட பார்வை, கருவிழி நோய், கண் சதை, சர்க்கரை கண் விழித்திரை நோய் கண்ணீர் அழுத்த குறைபாடு ஆகிய நோய்களுக்கு தகுந்த பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். முகாமில் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

இதுகுறித்து கண் மருத்துவர் வினோத் கூறும்போது….. “கொரோனாவிற்கு பிறகு கண் பரிசோதனை என்பதையே மக்கள் மறந்துவிட்டனர். அவர்களுடைய இடத்திற்கே சென்று பார்த்து வருகிறோம். குழந்தைகள் அதிகமாக செல்போன்களை பயன்படுத்துகின்றனர். இது போன்ற முகாம்களை பயன்படுத்தி கண் பரிசோதனை செய்து கொள்வதும் அவசியமானதாகும் என்றார்.

முகாமில் வினோத் கண் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் வினோத் ரோட்டரி சங்கர் தலைவர் Rtn செந்தில்குமார் மற்றும் செயலாளர் Rtn லோகேஸ்வரன் ஸ்ரீரங்கம் 6வது, 7வது வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *