Site Logo mobile
Search Icon
Mobile Gif
Citizen Voice

தேங்கி நிற்கும் மழை நீரால் பள்ளி மாணவர்கள் அவதி

திருச்சியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நகரின் முக்கிய வீதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. 

திருச்சி தீரன் நகர் அரவிந்த் நகர் பகுதியில் உள்ள எஸ் ஏ எஸ் பள்ளிசெல்லும வழியில் கடந்த 10 நாட்களாக இதே நிலை நீடித்து வருகிறது இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றன மேலும் அப்பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

250க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசிக்கும் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

 எனவே மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *