Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தேமுதிக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 19ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானா அருகே நடைபெற்றது. விழாவிற்கு வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார், தெற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன், மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

உயர்மட்ட குழு உறுப்பினர் முருகேசன், மாநில தொண்டரணி துணைச்செயலாளர் சாகுல் ஹமீது, மாநில மாற்றுத்திறனாளி அணி துணை செயலாளர் வாஞ்சிகுமரவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக டெல்லி சாமிநாதன் கலந்துகொண்டு கட்சி சாதனைகள் குறித்து விளக்கி பேசி சிரப்புரையாற்றினார்.

தொடர்ந்து ஐநூறு ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.டி தங்கமணி வரவேற்று பேசினார். இறுதியாக பிச்சாண்டார்கோவில் ஊராட்சி கழக செயலாளர் ஐயப்பன் நன்றி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *