Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சாலை வசதிகளை சீர்  செய்யாமல் இருப்பதால் பொதுமக்கள் சிரமம்

திருச்சியில் “கருமண்டம் 56 வது வார்டு வட்ட மாமன்ற உறுப்பினர் மஞ்சுளாதேவி”  கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ள “சோழ நகர், விசுவா நகர் வாட்டர் டேங்க்” அருகில் சாலை வசதிகளை ஒரு சில பகுதிகளை மட்டும் சரி செய்து மற்ற சாலை  பகுதிகளை சீர்  செய்யாமல் இருப்பதால் பொதுமக்கள் நடந்து  செல்வதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

மேலும் மழைக் காலங்களில் சாலைகள் போடாத பகுதியில் தண்ணீர் தேக்கங்கள் ஏற்பட்டால் மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சலால் பொதுமக்களுக்கு நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அந்தப் பகுதியில் எல்லா சாலைகளையும் விரைவாக சரி செய்து  பணியை சிறப்பாக செய்தும், பொதுமக்களுக்கு நோய்கள் வராமல் தடுக்க முன் எச்சரிக்கையாக செயல்பட கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் இந்த பதிவில் அந்தப் பகுதிகளின் சாலை பகுதிகளின் போட்டோவை பதிவில் போடப்பட்டுள்ளது. இப்படிக்கு பொது நலன் கருதி T.ரவிச்சந்திரன் Msc.,B.Ed.,BL., வழக்கறிஞர், திருச்சி Cell ; 9385694055, 9655427655.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *