Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இன்று இந்தூரில் இரண்டாவது போட்டி தொடரை வெல்ல இந்தியா தீவிரம்!!

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் 5ம் தேதி முதல், நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க தயாராகும் வகையில், தாயகத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணிக்கு கே.எல்.ராகுலும், கடைசி போட்டிக்கான அணிக்கு ரோகித் – சர்மாவும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மொகாலியில் நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில், இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பீல்டிங், பவுலிங், பேட்டிங் என மூன்றிலும் ஆஸ்திரேலியாவை அலறவிட்ட இந்தியா சிறப்பாக விளையாடியது. இந்நிலையில், 2வது போட்டி, மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில் இன்று நடக்கிறது. பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. மொகாலியில் விளை யாடிய இந்திய அணியே இன்றைய போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தருக்கும் இன்றைய போட்டியில் வாய்ப்பு அளிப்பது பற்றியும், பும்ராவுக்கு பதில் சிராஜ்க்கு வாய்ப்பு அளிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையான போட்டியை கொடுக்கும் திறமை இந்திய அணியிடம் உள்ளது என்கிறார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *