Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

13 கிலோ குட்கா பறிமுதல் – கடைக்கு சீல்

திருச்சிராப்பள்ளி, உறையூர் சாலை ரோடு பகுதியில் உள்ள குரு பீடா ஸ்டால் என்ற கடை தொடர்ந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் அபராதங்கள் செலுத்தி ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்று அந்த கடை சீல் செய்யப்பட்டது.

மேலும், தொடர்ந்து மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் ஆகியோர் ஆய்வின்போது அவரது கடை மற்றும் லிங்கம் நகரில் உள்ள வீட்டில் சுமார் 13 கிலோ புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டு அந்த கடை மீண்டும் சீல் செய்யப்பட்டு மேல் நடவடிக்கைக்காக உறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும், வழக்கு போடுவதற்காக இரண்டு சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவுப் பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு கூறுகையில்…. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார்.

இதுபோன்று பொதுமக்களும் உணவு சம்பந்தமான கலப்படங்களுக்கும் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் உணவு பொருள் வாங்கும் கடைகளில் கண்டறியப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.

புகார் எண் : 99 44 95 95 95 / 95 85 95 95 95 மாநில புகார் எண் : 9444042322

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *