Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

யூ டியூபர் சவுக்கு சங்கர் நண்பர்களுக்கு கும்மாங்குத்து

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜா. வக்கீல். யூ டியூப் பதிவாளர் சவுக்கு சங்கரின் நட்புவட்டத்தில் இருந்து வந்தார். சவுக்கு சங்கரின் யூ டியூப் சேனலைச் சேர்ந்த சூர்யா, பிரதீப் ஆகியோர் ராஜாவை சந்திக்க வேலாயுதம்பாளையம் வந்தனர். பாலத்துறை பகுதியில் உள்ள கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு காரில் வந்து இறங்கிய அடையாளம் தெரியாத 6 பேர், ராஜா, சூர்யா, பிரதீப் ஆகியோரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். இதில் பலத்த காயமடைந்த ராஜா, மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


திமுகவிற்கு மட்டும் சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த சவுக்கு சங்கர் பின்னர் அனைத்து ஆதங்கங்களையும் கொட்டித்தீர்த்து வருகிறார். ஆனால் திமுகவிற்கு எதிராக இவரது கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வந்தன.

சமீபத்தில் நடந்த காவல்துறையினருடனான ஆலோசனையில் முதல்வர் ஸ்டாலின் சமூக வலைத்தளங்களில் வரும் நடவடிக்கைகளை காவல்துறையினர் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் எனத்தெரிவித்திருந்த நிலையில் இப்பொழுது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *