Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் ரேஷன் பொருள்கள் கடத்தல் – குடியுரிமை வழங்க குற்றப்புலனாய்வு பிரிவினர் அதிரடி!!

திருச்சி விமான நிலையம் மற்றும் கேகே நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ரேஷன் கடைகளில் இருந்து அரிசி மற்றும் கோதுமை கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது .

Advertisement

இதனை தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட குடியுரிமை வழங்க குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று காலை ஏர்போர்ட் வயர்லெஸ் சாலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சென்ற பொலிரோ வாகனத்தை நிறுத்தி நெடுஞ்சாலை  போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்தனர்.

இதனை அறிந்த வாகன ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார். பின்பு வாகனத்தை சோதனை செய்த போது அந்த வாகனத்தில் நியாய விலை கடையில் வழங்கப்படும் நான்கு மூட்டை அரிசி கோதுமை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு துறையினரிடம் ஏர்போர்ட் போலீசார் ஒப்படைத்தனர். 

Advertisement

இது குறித்து வழக்குப்பதிவு செய்த குடியுரிமை வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *