Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

முசிறியில் விறகு வெட்டும் கூலி தொழிலாளி சாலை விபத்தில் பலி

கரூர் மாவட்டம் குளித்தலை தேசியமங்கலம் பகுதியை சேர்ந்த அப்பாநாயக்கர் மகன் கண்ணதாசன் (23) விறகு வெட்டும் கூலி தொழிலாளி, இவர் சம்பவத்தன்று முசிறி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில் விறகு வெட்டி லாரிக்கு லோடு ஏற்றிவிட்டு தனது ஊரான தேசியமங்கலதிற்கு தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் முசிறி திரும்பி தா.பேட்டை ரோடு ரவுண்டானா அருகில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வந்த தனியார் பேருந்து கண்ணதாசன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் மீது மோதியதில் சம்பவ இடத்திலேய கண்ணதாசன் இறந்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த முசிறி போலீஸார் இறந்த கண்ணதாசன்  சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *