Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் கஞ்சா விற்றவர் கைது – 28.5 கிலோ கஞ்சா, 5750 ரூபாய் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்

திருச்சி மாவட்டம் மணிகண்டம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கள்ளிக்குடி அரசு புதிய காய்கறி மார்க்கெட் அருகே கஞ்சா விற்கப்படுவதாக நவல்பட்டு காவல் ஆய்வாளர் சுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் ஆலோசனையின் படி அந்த பகுதியில் அதிரடியாக ரோந்து சென்ற பொழுது, ஒருவர் இருசக்கர வாகனத்தில் வெள்ளை சாக்கு மூட்டையில் ஏதோ கட்டி வைத்துக் கொண்டிருந்தவர் போலீசை கண்டதும் தப்பி ஓடி உள்ளார்.

அவரை சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் பிடித்து அந்த சாக்கு பையை சோதனையிட்டதில் சாக்கில் 28.5 கிலோ கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் கஞ்சா விற்ற பணம் 5 ஆயிரத்து 750 அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

பின்னர் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்த பொழுது அவர் மணிகண்டம் தீனதயாளன் நகரை சேர்ந்த சுலைமான் மகன் நைனா முகமது (50) என்றும் தெரியவந்தது அதன் அடிப்படையில் அவரிடம் இருந்து கஞ்சா, பணம், விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் இச்சம்பவம்குறித்து வழக்கு பதிவு செய்து மணிகண்டன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *