திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த திருச்சி மதுரை நெடுஞ்சாலை அருகே உள்ள சமத்துவபுரம் குடியிருப்பு பகுதி அருகில் 12 அடி நீளம் கொண்ட மலை பாம்பு ஒன்று குரங்கை இறுக்கி சுற்றிக் கொண்டிருந்தது.
அதனைக் கண்ட மற்ற குரங்குகள் சத்தம் போட்டுள்ளன. உடனடியாக அருகில் சென்று பார்த்தபோது மலைப் பாம்பு ஒன்று குரங்கினை இறுக்கி பிடித்து கொண்டிருந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கும் வனத்துறையினருக்ம் தகவல் தெரிவித்தனர்.
நிலை அலுவலர் மனோகர் மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலை பாம்பினை போராடி பிடித்தனர். பின்னர் குரங்கை இறந்த நிலையில் மீட்டனர். மலைப்பாம்பு மற்றும் குரங்கினை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments