Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கொலை முயற்சி செய்த ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையிலும், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கொலை முயற்சியில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அதன்படி, கடந்த (27.09.23)-ந்தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கர் கோயில் தெருவில் பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் காரணமாக பூக்கடையில் வேலை செய்யும் தொழிலாளியை நடந்து சென்றபோது ஆபாசமாக திட்டியும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் அதே பகுதியை சேர்ந்த ரவுடி சுரேஷ் (எ) ஆட்டுகுட்டி சுரேஷ் (32), த.பெ.மாரிமுத்து, படையப்பா (எ) ரெங்கராஜ், (43), த.பெ.மாரிமுத்து ஆகியோரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ரவுடி சுரேஷ் (எ) ஆட்டுகுட்டி சுரேஷ் என்பவர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அடிதடியில் ஈடுபட்டதாக 5 வழக்குகளும், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக ஒரு வழக்கும், கொலை வழக்கு ஒன்று உட்பட 7 வழக்குகள் பல்வேறு நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. எனவே, சுரேஷ் (எ) ஆட்டுகுட்டி சுரேஷ் தொடர்ந்து பொது அமைதிக்கு தொந்தரவு செய்பவர் என விசாரணையில் தெரியவருவதால்,

மேற்கண்ட எதிரியின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிக்கு அவர் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *