திருச்சி மாவட்டம், மணப்பாறை ஆட்டுச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆட்டுச்சந்தையும் வாரந்தோறும் புதன்கிழமை காலை 5 மணிக்குத் துவங்கி 10 மணிவரை நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வந்த நிலையில் விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்த விவசாயம் முடங்கி இருந்த நிலையில் கால்நடை வளர்ப்பு விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. ஆடுவளர்ப்பு மூலம் கிடைக்கும் வருமானம் விவசாயிகளுக்கு வருமானத்தை ஏற்படுத்தித் தரக்கூடியதாக உள்ளது. இதனால் விவசாயிகள் ஆடுகள் வளர்ப்பும் அவர்களின் பொருளாதாரத்திற்கு பெரும் உதவிபுரிந்து வந்தது. தற்போது கடந்த ஒருமாதமாக பரவலாக நல்லமழை பெய்துவருவதால் பசும் புற்கள் முளைத்து கால்நடைகளுக்கு பசுந்தீனவம் கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை வருகிற 12ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆட்டுக்கறியின் தேவை அதிகரிக்கும் என்பதால் மணப்பாறை ஆட்டுச்சந்தையில் ஆடுகள் அதிகளவில் வரத்து மழையால் விலை குறைந்துள்ளது. தீபாவளிக்காக அதிகளவில் ஆடுகள் விற்பனையாகும் என்பதால் ஆடுவளர்ப்பவர்கள் ஆடுகளை விற்பணை செய்வதற்காக அதிகளவில் சந்தைக்கு கொண்டுவந்திருந்தனர். இன்று (08.11.2023) காலை நடைபெற்ற சந்தைக்கு சுமார் 3000ற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பணைக்காக கொண்டுவரப்பட்டிருந்தன. மேலும் தீபாவளி பண்டிகைக்காக ஆடுகள் வாங்குவதற்காக அதிகளவில் வியாபாரிகள் சந்தைக்கு திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெருமளவில் வியாபாரிளும் வந்திருந்தனர்.
விலை குறைவால் வியாபாரிகளும், ஆடுகள் வளர்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். சாதாரணமாக ஒரு ஆட்டிற்கு ரூபாய் 500 முதல் 1000 வரை விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். தீபாவளிக்கு 4 நாட்கள் இருப்பதால் ஆடுகளுக்கு மழை நேரத்தில் மேய்ச்சல் பாதிக்கும், நோய் தாக்கும் அபாயம் உள்ளதாலும், வளர்ப்புக்காக ஆட்டை வாங்கி செல்லும் பொதுமக்கள் குறைந்த அளவிலேயே சந்தைக்கு வருகை தந்தனர். இதனால் ஆடு வளர்ப்போர் தீபாவளிக்கு அதிக விலைக்கு விற்பனையாகும் என்று வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்
அறிய….
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments