Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

விவசாயிகள் வேதனைக்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் – திருச்சியில் பாண்டியன் பேட்டி

குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்ததற்கு கண்டனம் தெரிவித்து வருகின்ற 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தொடர்ந்து 29ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் நடத்தப்படும்.சிப்காட்க்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு விவசாய சங்க கூட்டமைப்பின் சார்பாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன். மத்திய அரசின் வேளாண் சட்டத்தைக் காட்டிலும் மிகக் கொடுமையான நில ஒருங்கிணைப்பு சட்டம் (2023) – ஐ தமிழக அரசு எந்தவொரு விவாதமுமின்றி நிறைவேற்றியுள்ளது விவசாயிகளுக்கு மிகப் பெரும் ஆபத்தானது. சட்டவிரோதமாக சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுத்துள்ளது முதல்வர் ஸ்டாலின் அரசு. இப்போது குண்டர் சட்டம் திரும்பப்பெற்றுள்ள நிலையில், விவசாயிகள் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திராவிட மண் என பேசும் மு.க.ஸ்டாலின் அரசு கொடுமையை நடத்துகிறது. எத்தனையோ மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில் யார் மீதும் குண்டர் சட்டம் இதுவரை போடாத நிலையில், தமிழகத்தில் இதுபோன்று நடப்பது ஏற்புடையதன்று.

விவசாயிகள் வேதனைக்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். விவசாயிகள் மீதான வழக்குகள் திரும்ப பெறப்பட வேண்டும். நிபந்தனை இல்லாமல் அனைவரும் விடுவிக்கப் பட வேண்டும். அமைச்சர். எ.வ.வேலு, திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். வருகின்ற 21 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம். 29ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. விவசாயிகளின் மீதான விரோதப் போக்கு தொடர்ந்தால் தேர்தல் களத்தில் எதிரொலிக்கும். களத்தில் எதிர்கொள்வோம். அமைச்சர் எ.வ.வேலு தனது அறிக்கையை திரும்ப பெற வேண்டும் அவருடைய கருத்து தவறானது, கண்டிக்கத்தக்கது.

இந்த அறிக்கை திமுக அரசு விவசாயிகளுக்கு எதிரானது என்பது போல் உள்ளது இதனை வன்மையாக கண்டிக்கிறோம். முதலமைச்சர் பொதுமன்னிப்பு கேட்கவேண்டும் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *