Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதியேற்பு

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (24.11.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தலைமையில் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழியினை அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உறுதிமொழியினை வாசிக்க அதனைத் தொடர்ந்து அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பின்வரும் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். 

இந்திய அரசமைப்பு முகப்புரை இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும் சமநலச் சமுதாயமும் சமயச் சார்பின்மையும் மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய, பொருளியல், அரசியல், நீதி, எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமய நம்பிக்கை. வழிபாடு இவற்றில் தன்னுரிமை, சமுதாயப் படிநிலை, வாய்ப்பு நலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும். அவர்கள் அனைவரிடையேயும் தனி மனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிபடுத்தும் உடன் பிறப்புரிமையினை வளர்க்கவும் உள்ளார்ந்த உறுதியுடையராய், நம்முடைய அரசமைப்புப் பேரவையில், 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளாகிய இன்று, ஈங்கிதனால், இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கி றோம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *