Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

கடந்த (10.10.2023)-ந் தேதி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்கரை கீழபுதூரில் வாடகைக்கு வீடு எடுத்து, சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தி வருவதாக பெறப்பட்ட புகாரின் பேரில் பாலக்கரை, துரைசாமிபுரத்தை சேர்ந்த பானு (38) க.பெ.சேவியர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் உட்பட 6 நபர்கள் சேர்ந்து, சிறுமிகளை வற்புறுத்தியும், மிரட்டியும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வழக்கின் எதிரியான பானு சிறுமிகளை வற்புறுத்தியும், மிரட்டியும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துபவர் என விசாரணையில் தெரியவந்ததால், மேற்படி எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியினை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மகளிர் தனிச்சிறை இருந்து வரும் எதிரி மீதான குண்டர் தடுப்பு ஆணை சார்பு செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு காவலின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இதே வழக்கில் சம்மந்தப்பட்ட திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த எதிரிகள் ரவிக்குமார், அசோக், அபிநிஷா, பானு @ பியாரி பானு ஆகிய 4 எதிரிகள் மீது திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆணையின்படி ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்று குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *