Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அரசு அதிகாரிகளை கண்டித்து CPI(ML) ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் தொடரும் பட்டியல் இன மக்கள் மீதான தாக்குதல்கள், படுகொலைகள், வன்கொடுமைகள், தாக்குதல்களை தடுக்க தவறிய காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வேங்கைவயல் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) CPI(ML) கட்சியின் சார்பாக தந்தை பெரியார் சிலை அருகே மாவட்ட குழு உறுப்பினர் மெக்கானிக்  இளையராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஞானதேசிகன், மாநிலகுழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜ்குமார், ஆகியோர் பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் எம்,தங்கராஜ், மாவட்டகுழு உறுப்பினர்கள் கே.கருப்பையா, கே.மாசிலாமணி, ஆவா .இளையராஜா, ஆர்.ராமாயி, எம்.பழனிவேல், மாணவர் கழக பொறுப்பாளர் டி.அறிவழகன் மற்றும் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *