Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

25 லட்சம் மதிப்பீட்டில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த திருச்சி மாநகராட்சி

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் 25 லட்சம் மதிப்பீட்டில் முதல் கட்டமாக சென்னை மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை மேயர் மு.அன்பழகன், ஆணையர் மரு.இரா.வைத்திநாதன் ஆகியோர் சென்னைக்கு வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று (06.12.23) சென்னை மாவட்டங்களில் மிக்சாம் புயல் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் 300 தூய்மை பணியாளர்கள், 3 சுகாதார ஆய்வாளர்கள், 10 தூய்மைப்பணி மேற்பார்வையாளர்கள் சுகாதாரப் பணிகளுக்கு தேவையான உபகரணங்களுடன் கடந்த (04.12.23) அன்று அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் அரிசி, மளிகை பொருட்கள், போர்வைகள், பிஸ்கட் பாக்கெட்டுகள், பிரட், மருந்து பொருட்கள், குடிநீர் பாட்டில்கள், கோதுமை மாவு, நாப்கின் போன்ற பொருள்கள் மேயர் அன்பழகன், ஆணையர் ஆகியோர் அனுப்பி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஜி.திவ்யா, நகரப் பொறியாளர் பி.சிவபாதம் ,மண்டலத் தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், பி.ஜெய நிர்மலா மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *