Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

“திருச்சி கிராப்பட்டி மேம்பாலம் பாதியில் நிற்பதற்கு ராணுவ அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் காரணம்” – துரைமுருகன் திருச்சியில் பேட்டி!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சட்டமன்ற பேரவை பொது தணிக்கை குழு ஆய்வுக் கூட்டம் முடிந்த பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் சட்டபேரவை தணிக்கைக் குழு தலைவர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது தணிக்கைக்குழு கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது. 

Advertisement

கேட்ட கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்களை அதிகாரிகள் மூலம் பெற்றோம் .எனவே ஆய்வு திருப்திகரமாக நடந்தது . நாளை திண்டுக்கல் மாவட்ட ஆய்வில் கலந்து ஆளும் கட்சியினர் கலந்து கொள்வார்கள் என பதிலளித்தார். 

கிராப்பட்டி மேம்பாலம் முடிக்கப்படாமல் உள்ளது. காரணம் நிலம் ராணுவத்திற்கு சொந்தமானது. பொதுப்பணித்துறையில் 110 விதியின் கீழ் ஒரு நிலத்தை ஆர்ஜித படுத்தி பின்னரே வேலைகளை தொடங்க வேண்டும். நிர்மலா சீதாராமன் ராணுவ அமைச்சராக இருந்த போது அந்த வேலையை செய்யவில்லை. 60 சென்ட் நிலத்தை பேசி வாங்கி கொடுத்து இருந்து இருக்கனும். அதுகுறித்து எங்களுடைய ஆலோசனைகளை வழங்கினோம். 

Advertisement

மேலும் தமிழகத்தில் பல இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் ராணுவ இடங்களில் மற்றும் பல்வேறு காரணங்களால் தடைபட்டுள்ளது காரணம் பிஜேபி யா என கேட்டதற்கு பிஜேபி பற்றி எனக்கு தெரியாது என பதிலளித்தார். மேலும் பத்திரிகையாளர்கள் அரசியல் குறித்த கேள்வியை எழுப்பி அதற்கு இது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என கூறி சென்றார்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *