Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி அருகே காரில் சென்றவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி!!

கொடைக்கானல் சென்றுவிட்டு சொந்த ஊரான பாண்டிச்சேரிக்கு திரும்பும் வழியில் திருச்சியில் 6 பேர் கொண்ட கும்பல் காரை மறித்து கத்தியை காட்டி வழிப்பறி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பாண்டிச்சேரி அருகே பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ் (19). இவர் உறவினர்களுடன் கொடைக்கானலுக்கு சென்றுவிட்டு திருச்சி வழியாக சிறுகனூர் அருகே சென்று கொண்டிருந்தபோது காரை சாலையோரத்தில் நிறுத்திய போது திடீரென இருசக்கர வாகனத்தில் 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை சூழ்ந்தனர்.

காரில் இருப்பவர்கள் செய்வதறியாமல் தவித்தபோது கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்றனர். இதில் கத்தியை காட்டி மிரட்டியதில் காயம் அடைந்த ரவீந்திரன் மற்றும் பிரான்ஸில் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

Advertisement

மேலும் இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *