Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பேன் – பெண் பேட்டி.

திருச்சி ஶ்ரீரங்கம் அருகே திருவானைக்கோவில் அக்ரஹாரம் பகுதியில் வசித்து வருபவர் ரேணுகா இந்த பகுதியில் நீண்டகால பானி பூரி பாஸ்ட் புட் தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தள்ளுவண்டி கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றவர் நேற்று மீண்டும் கடையை திறக்க வந்த போது அங்கு தள்ளுவண்டி கடை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இது குறித்து அருகில் உள்ள திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது அதே பகுதியை சேர்ந்த கணவன் மனைவி ஆகியோர் ரேணுகாவின் தள்ளுவண்டி கடையை தள்ளிக் கொண்டு செல்வது காட்சிகள் பதிவாகி இருந்தது. இது குறித்து ரேணுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ஆனால் புகாரை காவல்துறையினர் பெறாமல் தள்ளு வண்டியை திருடி சென்றவர்களுக்கு சாதகமாக பேசுகின்றனர் எனக் கூறி திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி அவர்களிடம் புகார் மனு அளிக்க வந்தார். 

இது குறித்து பாதிக்கப்பட்ட ரேணுகா கூறுகையில்… கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்க சென்றேன். எனது புகாரை காவல் துறையினர் பெறாமல் என் மீது வழக்கு போடுவதாக காவல்துறையினர் மிரட்டல் விடுத்தனர். இது சம்பந்தமாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் அளித்தேன்..

அதை மனதில் வைத்துக்கொண்டு இன்று எனது தள்ளு வண்டியை திருடியவர்களுக்கு சாதகமாக காவல்துறையினர் செயல்படுகின்றனர். தள்ளு வண்டி கடையை திருடி சென்றவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இனியும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் என்னை அலைகழித்தால் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *