Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் ஒரே இடத்தில் பிடிபட்ட 10 அடி நீள இரண்டு மலைப்பாம்புகள்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் தங்கம் என்பவரது தோட்டத்தின் அருகே பழனிச்சாமி என்பவரது ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்பொழுது ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு அருகே சென்று பார்த்த போது 10 அடி நீளம் கொண்ட இரண்டு மலைப்பாம்புகள் கிடந்துள்ளன.

அதில் ஒரு மலைப்பாம்பு ஒரு ஆட்டுக்குட்டியை விழுங்கிய நிலையில் கிடந்தது. மற்றொரு மலைப்பாம்பு அதன் அருகிலேயே இருந்தது. இதனை கண்ட பழனிச்சாமி உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். 

பின்னர் தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகர் மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு மலைப்பாம்புகளையும் லாவகமாக பிடித்தனர். பிடிக்கப்பட்ட இரண்டு மலைப்பாம்புகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து மலைப்பாம்பினை வனத்துறையினர் அருகிலுள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *