திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, உத்தரவின்பேரில், திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் வழிப்பறி செய்யும் குற்றவாளிகள் மற்றும் அபாயகரமான ஆயுதங்களை வைத்திருக்கும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கியுள்ளார்.
அதன்படி, கடந்த (23.12.2023)-ந் தேதி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆனந்தா சில்க்ஸ் அருகே முன்விரோதம் காரணமாக டிரைவர் ஒருவரை கத்தியை காட்டி மிரட்டியும் அவரிடம் இருந்த ரூ.500/- பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில், சம்பவத்தில் ஈடுப்பட்ட சந்துக்கடை, பொரிக்காரதெருவை சேர்ந்த சூர்யா (எ) சூர்யபிரகாஷ் (23), த.பெ.ரமேஷ் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், எதிரி சூர்யா (எ) சூர்யபிரகாஷ் என்பவர் மீது கோட்டை காவல் நிலையத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக 3 வழக்குகளும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக 11 வழக்குக்களும், வீண் தகராறு செய்ததாக 1 வழக்கு உட்பட 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வருகிறது.
எனவே, எதிரி சூர்யா (எ) சூர்யபிரகாஷ் என்பவர் தொடர்ந்து, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக விசாரணையில் தெரியவந்ததால், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், திருச்சி மாநகரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments