Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நெல் அரவை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சபெருமாள்பட்டி ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான நவீன அரிசி ஆலை அமைந்துள்ளது. இங்கு ஆழத்துடையான் பட்டி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சின்னான்டவர் (58) என்பவர் பணிபுரிந்து வந்தார்.

வழக்கம் போல் நெல் அரவைப் பகுதிக்கு நெல் அனுப்பும் கன்வேயர் பகுதியில் அவர் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சின்னான்டவரின் கை பெல்ட்டில் சிக்கியதாக தெரிகிறது. அதில் சிக்கிய சின்னான்டவர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து ஆலை உரிமையாளர் உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *