Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கண்களைக் கட்டிக் கொண்டு உறியடித்த அமைச்சர் – உற்சாகத்தில் தொண்டர்கள்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (12.01.2024) நடைபெற்ற பொங்கல் விழாவில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு சமத்துவப் பொங்கல் கொண்டாடி அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் உறியடிக்கும் போட்டியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.என்.நேரு, கண்களைப் பொத்திக்கொண்டு உறியடித்தார். அப்போது அருகில் இருந்த அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *