Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சிக்கு முதலிடம் – அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற மேயர், ஆணையர்

தூய்மை நகரத்துக்கான விருது வழங்கும் விழா இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தலைமையில் புதுடெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் செயலர் மனோஜ் ஜோஷி, தமிழ்நாட்டில் தூய்மை நகரத்தில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி முதலிடம் பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் விருதை (11.01.2024) அன்று வழங்கப்பட்டது.

இந்த விருதினை மேயர் மு. அன்பழகன் மாநகராட்சி ஆணையர் மரு. இரா.வைத்திநாதன் ஆகியோர் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேருவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். இதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறுகைமில்…. திருச்சி மாநகராட்சியில் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் தமிழகத்திலேயே தூய்மையான மாநகரம் என்ற முதலிடம் கிடைத்திருக்காது.

திருச்சி மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தினாலும் அனைத்து திட்டத்திற்கும் பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். தூய்மையான மாநகராட்சி விருது பெற்றதற்கு முக்கிய காரணமே குப்பை இல்லாத மாநகராட்சி என்று தேர்ந்தெடுக்கப்பட்டது தான். 

இன்னும் மூன்று மாதங்களில் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி, தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாகவும், தற்போது தூய்மை மாநகராட்சியாகவும் விருது பெற்றதற்கு மக்களின் முழு ஒத்துழைப்பே காரணம் என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *