Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

உறவுகள் பொங்கலில் உறியடித்த அமைச்சர்

திருச்சி தேசியக் கல்லூரியில் பொங்கல் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.பல்வேறு துறைகளின் சார்பில் புதுப்பானை வைத்து புத்தரிசியிட்டு பொங்கலிடப்பட்டது. தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். 

உழைத்துக் களைத்து ஓய்ந்து போன உழவன் தன் பயிர்த்தொழில் செழிக்க ஒத்துழைத்த கதிரவனுக்கும், காளைகளுக்கும் நன்றி பாராட்டும் பொருட்டு உறவுகளோடு ஒருங்கிணைந்து நடத்தும் பண்பாட்டு சமத்துவ விழாவே பொங்கல் விழா என்று பொங்கல் உரை நிகழ்த்தினார். விழாவில் உரியடி, மாட்டு வண்டி, குதிரை வண்டி, சிலம்பாட்டம், சேவல் சண்டை, கயிறு இழுத்தல், மாணவ மாணவிகளின் நடனம் என்று பண்பாட்டைப் பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் கி.குமார் வரவேற்புரை வழங்கினார். துணைமுதல்வர் முனைவர் து.பிரசன்னபாலாஜி விழாவை ஒருங்கிணைத்து நன்றியுரை நல்கினார். இவ்விழாவில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் திரளாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *