Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் பெண் காவலருக்கு நெஞ்சுவலி, மற்றொருவருக்கு காயம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தை 2 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று சூரியூர் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 750 ஜல்லிக்கட்டு காளைகளும், 550 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.

இப்போட்டியானது காலை 07.00 மணிக்கு தொடங்கியது. இந்த ஸ்ரீ நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோவில் மாடு முதலில் அவிழ்த்து விடப்பட்டு, அதன் பிறகு முறையாக ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இந்த போட்டியை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார். மேலும் இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் டிவி, மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், கட்டில், பீரோ, தங்க காசு, வெள்ளி காசு, ரொக்கம் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.

இதில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கும் சிறந்த காளைக்கும் பைக்கும், இரண்டாவது பரிசாக வீட்டுமனையும் வழங்கப்படுகிறது. முன்னதாக கால்நடை இணை இயக்குனர் மும்மூர்த்தியை தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டுள்ளதா? ஜல்லிக்கட்டு போட்டிக்கு கலந்து கொள்வதற்கு உரிய தகுதி உள்ளதா? என்பதை மருத்துவ ஆய்வு என்கின்றனர். அதன் பிறகு ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும் 

அதேபோல் திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் பார்த்தசாரதி தலைமையிலான மருத்துவ குழுவினர், ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் போதை பொருட்கள் உட்கொண்டு உள்ளார்களா என்பதை பரிசோதனையும், ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் அடைப்பவர்களுக்கு முதல் கட்ட சிகிச்சையும் அளிக்கின்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சூரியூர் மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களிக்கும் விதமாக கேலரிகள் மற்றும் தடுப்பு வேலியை அருகில் வாகனங்களை பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சூரியூர் ஜல்லிக்கட்டில் தடுப்பு வேலி அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவெறும்பூர் காவல் நிலைய காவலர் போக்குவரத்து பிரிவு எஸ்.ஐ சுரேஷ் காலில் காயம் ஏற்பட்டது. உடனே ஆகிலிருந்த முதலுதவி சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணியில் இருந்த பெரம்பலூர் காவல்நிலைய ஏட்டு கீதாவிற்கு (40) நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபட்டார்.

ஜல்லிக்கட்டில் 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *