திருச்சி வினோத் கண் மருத்துவமனை மற்றும் சர்க்கார் பாளையம் பனையக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகா பார்த்தசாரதி இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நாளை (29.01.2024) நடைபெற உள்ளது.
காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை சர்க்கார் பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெற இருக்கிறது. இதில் கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகளுக்கான ஆலோசனைகள், பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சைகள் செய்யப்படும்.
இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments