Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தறுமாறாக ஓடிய காவல்துறை வாகனம் – 6 பைக் சேதம் – பெண் பலி பதறவைக்கு சிசிடிவி காட்சி

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே சீலைபிள்ளையார் புதூர் மாரியம்மன் கோவில் தெருவில் காவல்துறையின் வாகனத்தை ஒட்டிய காவலர் கட்டுப்பாட்டை இழந்து ஆறு இரு சக்கர வாகனங்களில் மோதி சென்றது. பின்னர் தெருவில் வந்து கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானர்.

இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் காவல்துறை வாகனத்திற்கு அடியில் சிக்கிக் கொண்டதால் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல்துறை வாகனத்தை கவிழ்த்து அவர் உடலை மீட்டனர்.

காவல்துறையின் வாகனத்தை ஓட்டிய காவலர் போதையில் இருந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறை வாகனம் மோதி பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிரடிப்படையினர், வஜ்ரா வாகனங்கள் ஆகியவை பாதுகாப்புக்காக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *