Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து பணம், மது பாட்டில்கள் திருட்டு

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மருதம்பட்டி கிராமத்தில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் கடையின் மேற்பார்வையாளர் பெருமாள் பணிகள் முடிந்து கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று கடையை திறப்பதற்காக அவர் வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேற்பார்வையாளர் பெருமாள் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராதா தலைமையில் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது நேற்று இரவு கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை திருப்பி வைத்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் 2 உயர் ரக குவாட்டர் மது பாட்டில்களையும் திருடி சென்றது தெரியவந்தது.

இந்த திருட்டு சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *