Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி அருகே அரசு பள்ளி மாணவி தற்கொலை

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பச்ச பெருமாள்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் சென்னையிலும், இவரது மனைவி நாமக்கலிலும் பணியாற்றி வருகின்றனர். இவர்களது மகள் பச்சபெருமாள்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்.

அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவி வீட்டில் பாட்டி இல்லாத நேரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவிக்கான தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *