Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அல்லூர் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

திருச்சி ஜீயபுரம் அருகே அல்லூரில் செல்வ விநாயகர் கோயில் கும்பாபி ஷேக விழா நேற்று நடந்தது. திருச்சி – கரூர் மெயின் ரோடு அல்லூர் மேலத்தெருவிலுள்ள செல்வ விநாயகர் கோயில் திருப்பணிகள் செய் யப்பட்டதை அடுத்து கும்பாபி ஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு முதல் நாள் காவி ரியில் இருந்து புனித நீர் எடுத் துவரப்பட்டு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், அங்குரார்ப்பனம், கும்ப அலங்காரம், யாக சாலை பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் திரவிய ஹோமம். சோமகும்ப பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்சி யும் நடந்தது. 

தொடர்ந்து 4ம் கால யாகசாலை பூஜையில் மூல மந்திர ஹோமம், திருமுறை பாராயணம், கடம் புறப்பாடும் நடந்தது. தொடர்ந்து விநாயகர் சன்னதி கோபுர கலசத்திற்கு சிவாச்சார்யார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் மூலவ ருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திருபணிக்குழு சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கபட்டது. விழாவில் அல்லூர், ஜனதா நகர், கடியாக்குறிச்சி, ஜீயபுரம் முத்தரசநல்லுர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜீயபுரம் காவல் துறையினர் செய்திருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *