உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கான சிறப்பு யோகாச னப் பயிற்சிகள் திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் வருகிற 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது.
பயிற்சியில் மூட்டுவலி, முழங்கால் வலி, உயர் மற்றும் குறை ரத்த அழுத்தம், நீர்க்கட்டி தைராய்டு மற்றும் தூக்கமின்மை போன்ற பெண்களுக்கான பல பிரச்சினைகளுக்கு எளிய முறையில் யோகாசன பயிற்சி அளிக்க உள்ளனர். இதனை தொடர்ந்து மகளிருக்காக மட்டும் பொதுஅறிவு வினா- வினா போட்டி நடைபெறும்.
இதில் வெற்றி பெறுவோருக்கு உடனடியாக பரிசுகள் வழங்கப்படும். பயிற்சியில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட மைய நூலகம் முதல்நிலை நூலகர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments