Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இரு வீடுகளில் 20 சவரன் நகை திருட்டு – அச்சத்தில் பொதுமக்கள்

திருச்சி மாவட்டம் துறையூர் கண்ணபிரான் காலனியில் வசிப்பவர் ராணி. இதே பகுதியில் வசிப்பவர் ஜெயலட்சுமி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு ராணி தன் மகள் வீடான சமயபுரத்திற்கும், ஜெயலட்சுமி சென்னையில் நடைபெறும் உறவினர் திருமணத்திற்கும் சென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து மறுநாள் வீட்டிற்கு வந்து ராணி மற்றும் ஜெயலட்சுமி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்செடைந்தனர் பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கடந்துள்ளது உடனே இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர் இனத்திலிருந்து போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று இரவில் இவர்களது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் இருந்த நகை மற்றும் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.

இதில் ராணி வீட்டில் 5 சவரன் நகையும், ஜெயலட்சுமி வீட்டில் 15 சவரன் நகையும் திருடு போனது தெரியவந்துள்ளது. இது குறித்து துறையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்க்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்  வரவழைக்கப்பட்டு  தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இரவு நேர பாதுகாப்பு பணியில் அதிக காவலர்களை ஈடுபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

 https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *