Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சரி செய்யப்பட்ட பாலத்தை திறந்த அமைச்சர்கள்

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலை ரயில்வே மேம்பாலத்தில் ஒரு பகுதி சரிந்ததால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனையடுத்து தென் மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் மற்றொரு பாலத்தின் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.

நெடுஞ்சாலைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பாலத்தை சீரமைக்கும் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. 60 நாட்களுக்கு பிறகு பணிகள் முடிவடைந்து மீண்டும் ஐஐடியில் இருந்து பேராசிரியர் அழகு சுந்தரம் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினரால் பாலத்தின் உறுதித் தன்மை, அனைத்தையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர். இதனைத் தொடர்ந்து பழுது ஏற்பட்டு சரி செய்யப்பட்ட திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜி கார்னர் ரயில்வே மேம்பாலத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் பாலத்தை வாகன பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

மேலும் இந்தப் பாலத்தின் உறுதி தன்மையை சோதனை செய்ய பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு சென்சார் பெருத்தப்பட்டுள்ளது. இந்த பாலப்பணிகளால் கடந்த 60 நாட்களாக அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *