திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் இருந்து லால்குடி திருமணமேடு பகுதியை நோக்கி வந்த லாரியை சமயபுரம் போலீசார் வாகன தணிக்கையின் போது பிடித்தனர். அப்போது லாரியில் 50 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி 100 மூட்டைகளை போலீசார் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக சமயபுரம் போலீசார் விசாரணை செய்து குடுமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் ரேஷன் அரிசி கடைசியாக லாரி ஓட்டுநர் மற்றும் உடன் இருந்த இரண்டு பேரை பிடித்து, மூவர் மீது வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments