Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கச்சத்தீவு விவகாரம் – அண்ணாமலைக்கு மட்டும் எப்படி கிடைத்தது – காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சியில் பேட்டி

திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தி தொடர்பாளரும் – மண்டல பொருப்பாளருமான இப்ராஹீம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் … காங்கிரஸ் கட்சியின் பணம் தற்போது திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளது – காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து 135 கோடி சட்ட விரோதமாக அபகரித்துள்ளனர். இது முற்றிலும் பாஜகவின் பலி வாங்கும் செயல். இதே காலகட்டத்தில் 42 கோடி வசூலித்த பாஜகவிற்கு எந்த ஒரு வரி விதிப்பும் அபராதமும் இல்லை.

ஜனநாயகத்தின் மீது செலுத்தப்பட்டுள்ள போர் இது. இந்தியா கூட்டணியின் வலிமையை குழைக்க பார்கின்றனர். இது போன்ற விவகாரங்களில் ஜெர்மெனி நம் இந்தியாவிற்கு கண்டனம் தெரிவிக்கின்றனர். ஐ.நா கேள்வி கேட்கிறது ஆனால் எங்கள் உள்துறை விவகாரம் என்று பா.ஜ.க பதில் கூற மறுக்கிறது. கட்சித்தீவை பற்றி மிகவும் கவலை பட்டு பேசும் மோடி, லடாக்கில் 4 ஆயிரம் சதுர மீட்டர் நம் இடம் பறி போய் உள்ளது இதை பற்றி ஏன் பேசுவதில்லை. கச்சத்தீவு விவகாரத்தில் பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்யாமல் தற்போது தேர்தல் நேரத்தில் கையில் எடுத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது.

கட்சத்தீவு விவகாரத்தில் ஆர்.டி.ஐ file செய்த போது எத்தனையோ பேருக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அண்ணாமலைக்கு மட்டும் கட்சத்தீவு விவகாரத்தில் ஆர்.டி.ஐ எப்படி கிடைத்தது ? இது முற்றிலும் விதி மீறிய செயல். கட்சத்தீவு விவாகாரத்தை வைத்து பா.ஜ.க தமிழகத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறது. ஓட்டு வங்கிக்காக சமயம் பார்த்து பா.ஜ.க மற்றும் மோடி கட்ச தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். 2024 கட்சி ஆட்சியில் அமரும் – கட்ச தீவு விவகாரத்தில் நல்ல முடிவை எடுப்போம். கெஜ்ரிவால் கைது குறித்து… 75 ஆண்டுகளில் சிட்டி முதலமைச்சரை விசாரனைக்காக யாரும் கைது செய்யவில்லை.

வரலாற்றில் நடக்காத விஷயங்களை நாம் பார்கின்றோம். கெஜ்ரிவால் கைது மிக பெரிய அரசியல் காழ்புனர்ச்சி. என்னிடத்தில் பணம் இல்லை. அதனால் தான் நான் தேர்தலில் போட்டியிடவில்லை என நிர்மலா சீதாராமன் கூறுவது குறித்து … நிர்மலா சீதாராமன் ஆந்திராவில் affidavitல் 2 கோடி இருப்பதாக அவரே தாக்கல் செய்துள்ளார் ? பிச்சைகாரர் – பிச்சை என்று எல்லாம் பேசும் நிர்மலா சீதாராமன் எப்படி மக்களை சந்திப்பார் – தேர்தலில் நிற்பார் என்றார்? பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரிசர்வேஷன் வாயிலாக தான் பலன் அடைந்ததாக கூறி பின்னர் ரிசர்வேஷனுக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என பேசி இருக்கும் ஆதாரம் என்னிடத்தில் உள்ளது என கூறி அதனை பத்திரிகையாளர்கள் மத்தியில் காண்பித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *