Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பணப்பட்டுவாடா குறித்து புகார் அளிக்கலாம்’ – வருமான வரித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தேர்தலுக்கு இன்னும் 16 நாட்களே இருக்கும் நிலையில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தலையொட்டி, பணப்பட்டுவாடா உள்ளிட்டவை தொடர்பாகப் புகார் அளிக்க தொலைப்பேசி எண்களை வருமான வரித்துறை (Incometax Department) அறிவித்துள்ளது. 

 வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் 1800-425-6669 என்ற இலவச தொலைப்பேசி எண்ணில் புகார் அளிக்கலாம். மேலும், itcontrol.chn.@gov.in என்ற மின்னஞ்சலிலும், ஃபேக்ஸ் செய்ய 044- 28271915 என்ற எண்ணிலும், 94453-94453 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் அளிக்கலாம். பணப்பட்டுவாடா தொடர்பான புகார் அளிக்க 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *