Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் ஐடி ரெய்டு – பல லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு சிலர் தப்பியதாக தகவல்

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி சக்தி விநாயகர் கோவில் தெருவில் உள்ள ஒப்பந்ததாரர் ஈஸ்வரமூர்த்தி என்பவர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்புடன் 8க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை,பொதுப்பணத்துறை அரசு ஒப்பந்ததாரர் இவர்.

வருமானவரித்துறை அதிகாரிகள் வருவதற்கு முன் பல லட்ச ரூபாய் பணத்தை எடுத்து இவர் வீட்டில் இருந்து சிலர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரது மாமனார் என்.பி.வெங்கடாசலம். மருமகன் ஈஸ்வரமூர்த்தி திமுக, அதிமுக இரண்டு ஆட்சியிலும் அரசு ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். தேர்தல் பணம் பட்டுவாடா தொடர்பாக இவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

காலை முதலே வருமானவரித்துறை அதிகாரிகள் திருச்சியில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்பொழுது ஒப்பந்ததாரர் வீட்டுக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *