Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அடுத்தடுத்து 5 வீடுகளில் நகை, பணம் கொள்ளை

 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடி அருகே மால்வாய் புது சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 58 வயதான செல்வம். இவரது மகன் சுந்தரமூர்த்தி் இவர் கல்லக்குடியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த மாதம் 27 ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி இருவரும் வீட்டின் மேல் மாடியில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று தனது மனைவியுடன் கீழே உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

 

இந்நிலையில் கடந்த 5 ந்தேதி நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் சுந்தரமூர்த்தி இருந்த அறையை பூட்டி விட்டு மற்றொரு அறையில் உள்ள பீரோவில் இருந்த 9 பவுன் நகை மற்றும் ரூ. ஒரு லட்சத்து 95 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதே போல் மால்வாய் திருவள்ளுவர் நகருக்கு சென்ற மர்ம நபர்கள் 4 வீடுகளின் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்தனர்.

இதில் அசோக்ராஜ் வீட்டில் 3 1/4 பவுன் நகை பிஜூ வீட்டில் 5 பவுன் நகை தட்சாயேனி வீட்டில் ஒரு பவுன் நகை கரோலின் ஜான்சி ராணி வீட்டில் ஒன்றரை பவுன் நகை என மொத்தம் 19 1/2 பவுன் நகை, ரூ ஒரு லட்சத்து 95 பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

 இதுகுறித்து கல்லக்குடி காவல் நிலையத்தில் செல்வம் மற்றும் அசோக்ராஜ் ஆகியோர் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து ஐந்து வீடுகளில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *