Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கொடிக்கம்பம் கட்டியதில் மோதல். அதிமுக பிரமுகர் இருவருக்கு கத்தி குத்து. திமுக பிரமுகர் கைது

நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு கட்சியினரரும் தங்கள் வேட்பாளர்களுக்காக தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூரில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் பீட்டர் அல்போன்ஸ் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து பிரச்சாரம் செய்து விட்டு சென்றார். 

 பிரச்சாரத்தின் போது கட்டப்பட்ட இந்திய கூட்டணியின் கொடிகளை அகற்ற சொன்ன அதிமுகவை சேர்ந்த செந்தில்குமார், பாஸ்கர் ஆகியோரை திமுகவை சேர்ந்த பிரவீன், இளம்பரிதி ஆகியோர் கத்தியால் குத்தி உள்ளனர்.

 காயமடைந்த செந்தில்குமார், பாஸ்கர் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் கத்தி குத்து தொடர்பாக திமுகவை சேர்ந்த இளம்பரிதியை லால்குடி போலீசார் கை து செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *