Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து – திருச்சியில் ஜே.பி.நட்டா ரோடு ஷோ

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே வேட்பாளர் டாக்டர். பாரிவேந்தரை ஆதரித்து, முசிறி கைகாட்டி பகுதியில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி நட்டா வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பரப்புரையில் பேசிய ஜெ.பி.நட்டா…… நாட்டு மக்கள் உயர்வதற்கான உத்தரவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி உள்ளதாகவும், தமிழ் கலாசாரத்தின் மீது பற்று இருப்பதால் நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவி உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டுக்கு 11 மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளதாக கூறினார். D.M.K என்றால் வாரிசு அரசியல், பணமோசடி, கட்டபஞ்சாயத்து என்றுதான் அர்த்தம் என ஆங்கில வார்த்தைகளை சுட்டிக்காட்டி விமர்சித்த ஜெ.பி.நட்டா, இவற்றுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தெரிவித்தார்

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *