Saturday, October 4, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் 39 தொகுதிகளுக்கான தபால் ஓட்டு ஒருங்கிணைப்பு மையத்தை ஆட்சியர் நேரில் ஆய்வு

தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் வருகிற வெள்ளிக்கிழமை பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல் துறையினருக்கும் அவர்கள் பயிற்சி பெறும் மையங்களிலேயே தபால் வாக்கு செலுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் இ.டி.சி. எனப்படும் மின்னணு வாக்கு செலுத்தும் வசதியும் வழங்கப்பட்டது.

இது தவிர வாக்குச் சாவடிக்கு வர இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கும் தபால் வாக்கு வசதி வழங்கப்பட்டுள்ளது. தபால் வாக்கு செலுத்த விருப்பம் உள்ளவர்களுக்கு வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் கடந்த மாதம் 25-ந் தேதி வரை ’12-டி’ படிவத்தை வீடு வீடாக வழங்கினர். பின்னர் அந்த படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டது. முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கடந்த 8-ந்தேதி முதலும், போலீசாரிடம் கடந்த 11-ந்தேதி முதல் 137 பேர் வரையிலும் தபால் வாக்கு பெறும் பணி நடந்தது. திருச்சி கலை அரங்கம் திருமண மண்டபத்தில் தபால் ஓட்டுகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியிலிருந்து மாநிலம் முழுவதும் இருந்து கொண்டு வரப்படும் தபால் ஓட்டுகள் பிரிக்கப்பட்டு தொகுதி வாரியாக வழங்கப்பட்டது.

39 தொகுதிகளில் மொத்தமாக 8,400 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மட்டுமே 3,369 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. திருச்சியில் வைக்கப்பட்டு தபால் வாக்கு பெட்டிகளை தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டார்.நாடாளுமன்ற பொதுத் தேர்தல், 2024 ஐ முன்னிட்டு மாவட்டங்களில் பெறப்பட்டுள்ள தபால் வாக்குகளை 38 மாவட்டங்களுக்கு எளிதாக கொண்டு சேர்க்கும் வகையில் திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், இன்று (17.04.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலெட்சுமி, முதுநிலை மண்டல மேலாளர் (டாஸ்மாக்) / ஒருங்கிணைப்பு அலுவலர் தபால் வாக்குச்சீட்டு செந்தில்குமாரி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) ந.சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து  கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *